கழுத்தளவு தண்ணீர்
லேய், இன்னைக்கு மத்தியாணம் செம்பிராம்பூர் ( செண்பகராமன்புதூர் ) ஆத்துக்கு குளிக்க போவோமா? என்று நண்பனிடம் கேட்டேன். யாரெல்லாம்? என்று கேட்டான் அவன். நீ, நான், வேற நம்ம பயலுவ எவன் லாம் வரேனு சொல்ரானோ அவனுவலயும் கூட்டிட்டு போவோம். ஆனா நம்ம ரெண்டு பேருகிட்ட மட்டும் தானே சைக்கிள் இருக்கு? அதுனால என்ன நம்ம முப்பில்ஸ் போவோம் என்றேன் நான். முப்பில்ஸ் ஆ! அவ்ளோ தூரம் மூணு பேர வச்சுட்டு எவன்ல சைக்கிள் சவுட்டுவான்? லே! உனக்கு தெரியாதா நா நல்ல முப்பில்ஸ் ஓட்டுவன்னு. போன வாரம், நம்ம வடக்கூர் பயலுக கூட சேர்ந்து நான் பொய்கை அணைக் கட்டுக்கே முப்பில்ஸ்ல தான் போயிட்டு வந்தேன். லே, இந்த சவுடால லாம் என்கிட்ட உடாத மக்கா. லே, சத்தியமால. வேணும்னா வடக்கூர் பயலுவ கிட்ட கேட்டு பாரு. போல! உன்னை பத்தி எனக்கு தெரியாதா நா நம்ப மாட்டேன் என்றான் அவன் ஒரு சிறிய நமட்டு சிரிப்புடன். சரி சரி, நீ வீட்ல போய் சோறு தின்னுட்டு, உன் சைக்கிள் எடுத்துகிட்டு டக்கர் ஸ்டான்ட் கிட்ட வந்திரு. பயலுவலயும் அங்கேயே வர சொல்லிடு. நம்ம அங்க இருந்து ஒன்னா சேர்ந்து போவோம். செம்பிராம்பூர் ஆத்துல குளிச்சு ரொம்ப நாள் ஆச்சு. எப்படியாவது இன்னைக்கு...