மரக்குரங்கு
90 களின் இறுதியில் எங்கள் ஊரில் மிக பிரபலமாக இருந்த விளையாட்டு. சொல்லப்போனால் இயற்கையோடு இணைந்த விளையாட்டு அது. இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று தெரிந்து இருக்க கூட வாய்ப்பில்லை. இவ்வளவு ஏன், நாங்கள் விளையாடிய அந்த நாட்களில் கூட எங்கள் ஊரை தவிர வேறு எங்கும் இந்த விளையாட்டை நான் கண்டதில்லை. எனவே இந்த விளையாட்டை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. அப்படி என்ன விளையாட்டு என்று தானே கேட்கிறீர்கள், சொல்கிறேன் அந்த விளையாட்டின் பெயர் தான் மரக்குரங்கு. இந்த விளையாட்டிற்கு குறைந்தது 5 நபராவது வேண்டும். மேலும் மிக முக்கியமாக விளையாடும் இடத்தில் ஒரு 4 அல்லது 5 மரங்களாவது இருக்க வேண்டும் அப்போது தான் இந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கும். போட்டி தொடங்குவதற்கு முன்பாக கலந்து கொண்ட நபர்களில் யார் முதலில் தொட்டு வருகிறார் என்பதனை முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலும் இதனை இவ்வாறு தான் முடிவு செய்வோம். அதாவது, அனைவரும் வட்டமாக நின்று கொண்டு 1,2,3 இல் இருந்து 10 வரை எண்ணி அதில் யார் இறுதியாக வருகிறார்களோ அவர் தான் தொட்டு வர வே...